Main Menu

அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்றைய தினம் மேற் கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம்

அரசாங்க தவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருதமாறு:

01. வருமானத்திற்கு சாத்தியமான முறையில் பயன்படுத்துவதற்காக நெல் உற்பத்தியாளர்கள் மத்தியில் உலர்த்தல் தொழில்நுட்பத்தை பிரபல்யப்படுத்துதல்.

நெல்லைகுற்றிய பின்னர் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்காக உயர் தரத்திலான ஈரலிப்புத் தன்மையுடன் அறுவடை செய்யப்பட்ட நெல் அறுவடையை உரிய வகையில் உலர்த்த வேண்டும். இருப்பினும் உலர்த்துவதற்கு தாமதமாதல் முழுமையற்ற வகையில் உலர்த்தல் சீரற்றதாக உலர்த்தல் என்ற அடிப்படையில் எதிர்பார்த்த தரம் இல்லாமையினால் நெல்லை குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகின்றது. 

இதனால் வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவையின் துணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய நியமிக்கப்பட்ட செயற்பாட்டு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட வகையில் உலர்த்தலுக்கான தொழில்நுட்பத்தை விவசாயிகள் அறிந்துகொள்ளுவதற்கான முன்னோடித்திட்டமொன்று உயர் தரத்திலான உற்பத்திக்கு உரிமைகோரும் வருடத்தில் 2 முறை நெல் உற்பத்தியில் ஈடுபடும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாடு தழுவிய ரீதியில் நெல் ஆலை உரிமையாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் விவசாய சேவை திணைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் 5 விவசாய அமைப்புக்களுக்கு வரியற்ற 3 மில்லியன் ரூபா பெறுமதியான 2 மெற்றிக் தொன் வலுவைக் கொண்ட நடமாடும் நெல் உலர்த்தி மற்றும் வட்டியற்ற 6 மில்லியன் ரூபா பெறுமதியான 6 தொன் வலுவைக் கொண்ட நிலையான உலர்த்தியொன்று வீதம் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் செலவை மீண்டும் அறவிடும் பொறிமுறை ஒன்றுடன் வழங்குவதற்கு அமைச்சரவை அந்தஸ்து அற்ற பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி மைத்திராபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. தற்பொழுது உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாத்தல் மற்றும் இறால் உற்பத்தி மற்றும் உப்பளங்கள் போன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு உட்பட்ட சதுப்பு நிலங்களை புனரமைத்தல்.

அரசாங்கத்திற்கு உட்பட்ட ஈரலிப்புடனான வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்ப திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் காணியை ஏனைய அபிவிருத்திப் பணிக்காக விடுவிக்காதிருப்பதற்கும் நீர் உயிரின உற்பத்திக்காக தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காணி தொடர்பில் பணியாற்றும் பொழுது சம்பந்தப்பட்ட அமைச்சு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றின் மூலம் முறையான மதிப்பீடுகளை மேற்கொண்டு அதற்கமைவாக காணிகளை விடுவிப்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்கும் நீர்வாழ் உயிரின உற்பத்தி மற்றும் உப்பளங்கள் போன்ற பணிகளுக்காக அரசாங்கத்தினால் குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள காணிகளில் சம்பந்தப்பட்ட பணிக்காக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள காணிகளுக்காக வழங்கப்பட்டிருந்த காணிகளின் குத்தகை ஒப்பந்தத்தை மேலும் நீடிக்காது இந்த காணிகளில் உள்ள ஈரலிப்புடனான வனப்பகுதியை ஸ்தாபிப்பதற்காக வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கும் காணி ஆணையாளர் நாயகத்திற்கும் உத்தரவு பிறப்பிப்பதற்கும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் ஈரலிப்புடனான காணியின் அளவை 10ஆயிரம் ஹெக்டர் ஆக அதிகரிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவிப்பதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. சுற்றுலா துறையில் புரிந்துணர்வு தொடர்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசிக்கும் கம்போடியா அரசாங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்ளல்.

சமமான மற்றும் பரஸ்பர நலனடிப்படையில் சுற்றுலா துறையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதன் மூலம் இருநாடுகளுக்கிடையிலான தொடர்புகளை வலுவூட்டுவதற்காக சுற்றுலாத்துறை புரிந்துணர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் கம்போடியா அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. மின்சக்தி தொழில்நுட்ப ஊழியர்களுக்கு அனுமதி பத்திரமுறையொன்றை அறிமுகப்படுத்துதல்.

உரிய தரத்தைக்கொண்ட மின்சார கட்டமைப்பை அமைப்பதன் மூலம் மின்சார பாவனையாளர்களுக்கு பாதுகாப்புடனான சேவையை வழங்குவதைப் போன்று மின்சார தொழில்நுட்பவியலாளர்களுக்கு முறையான தொழிலாக அடையாளங்கண்டு அவர்களுக்கு கூடுதலான தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பம் மற்றும் கோரிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் கொடகேன மின்சார தொழில்நுட்ப ஊழியர்களுக்கு (மின்சக்தி தொழில்நுட்பவியலாளர்கள்) தொழில் அனுமதிபத்திரமொன்றை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த அனுமதி பத்திரமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு சபையும் நிர்மாணத்துறை அபிவிருத்தி நிறுவனங்களின் அங்கத்தவர்களைக் கொண்ட தொழில்நுட்ப அனுமதி பத்திர முறையை வலுப்படுத்துவதற்கும் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு குழுக்களை நியமிப்பதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்கள் நிதியமைச்சர் அவர்கள் மற்றும் வீடமைப்பு நிரமாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஆகியோரினால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு ஆலோசனைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. இடைக்கால கணக்கறிக்கை – 2020

2019அம் ஆண்டுக்கான இறுதி காலாண்டில் ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்த வேண்டி இருப்பதினால் இதன் பின்னர் தெரிவாகும் புதிய அமைச்சரவைக்கு அமைவாகவும் அரசாங்கத்தின் புதிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிக்கக்கூடிய வகையில் 2020 ஆம்ஆண்டுக்கான வரவு செலவு திட்டப் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒத்திவைத்து 2020ஆம் ஆண்டில் முதல் 4 மாத காலப்பகுதிக்காக அரசாங்கத்தை முன்னெடுப்பதற்குத் தேவையான செலவை உள்ளடக்கி இடைக்கால கணக்கறிக்கை தயாரித்து பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக செயல்படுவதற்கென நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. நிதி திருத்த சட்ட மூலம் – 2019

2019ஆம் ஆண்டு வரவு செலவ திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வருமானம் குறித்த ஆலோசனைகளை உள்ளடக்கிய திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மோட்டார் வாகங்கள் மீது ஆடம்பர வரி அறவிடுவதற்காக வேன் தனிப்பட்ட கெப் வாகனம் இரட்டை கெப் வாகனம் மோட்டார் சைக்கிள் மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி போன்ற பயணிகளின் போக்குவரத்து வாகனங்கள் லொறி வாகனங்கள் ட்ரக்டர் கை ட்ரக்டர் டெலர் முதலான பொருட்களை எடுத்துச்செல்வதற்கான வாகனங்கள் அம்புலன்ஸ் வாகனங்கள் மரண சடலங்களுக்கான வாகனங்கள் தவிர்ந்த எத்தகைய வாகனங்களையும் உள்ளடக்கிய வகையில் வரையறுத்துக் குறிக்கப்பட்ட மோட்டார் வாகனம் என்பது அர்த்தப்படுத்தும் திருத்தத்தை மேற்கொள்வதற்காகவும் கடன் ஆவணம் மற்றும் பொறுப்பேற்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவ செய்வதற்காக இலங்கைக்கு அப்பால் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவு அடிப்படையிலான 3.5 வீத வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் அறவீட்டும் வரியை விதிப்பதற்காகவும் 2018ஆம் ஆண்டு இல 35 கீழான நிதி சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான நிதி திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடட்டின் விமான சமையலை விரிவுபடுத்தும் திட்டம்

தற்பொழுது மேற்கொள்ளப்படும் விமான நிலைய விரிவுபடுத்தும் திட்டத்;திற்கு அமைவாக ஸ்ரீலங்கன் கேட்டரிங்கினால் 40ஆயிரம் சாப்பாடுகளை நாளாந்தம் விநியோகிக்கக்கூடிய வகையில் ஸ்ரீலங்கன் கேட்டரிங்கிற்காக விசேடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன சமையலறையை விரிவுபடுத்தும் தேவை இருப்பதினால் ஸ்ரீலங்கன் கேட்டரிங் சுற்றாடலுக்கு அருகாமையில் மேலும் 150 பேர்ச் காணி யொன்றை இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொண்டு விமான பயணிகளுக்கு உணவு முதலானவற்றை விநியோகிக்கும் தேவைக்காக விமான சமையலறையை விரிவுபடுத்துவதற்கு 250மில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள திட்டத்தை நடைமுறைப்படத்துவதற்காக நிதியமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. பேராதனை பல்கலைக்கழகம் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஊடாக வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள மானிய உடன்படிக்கை

பேராதனை பல்கலைக்;கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் தாய்லாந்தின் தொழில்நுட்பம் தொடர்பான ஆசிய நிறுவனத்திற்கு இடையில் விஞ்ஞான மற்றும் தரவு அறிவியல் தொடர்பான கற்கைநெறியை மேம்படுத்துவது தொடர்பில் முக்கிய உடன்படிக்கை இரண்டையும் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கிராஸ் பல்கலைக்கழகத்திற்கு இடையில் தெற்காசியாவிற்கான நடப்பு கற்பித்தல் ஆற்றல் தொடர்பில் முக்கிய உடன்படிக்கையிலும் களனி பல்கலைக்கழகம் மற்றும் இம்பிரியல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவம் தொடர்பான ஆய்வு அலுவலகத்திற்கு இடையில் பொருட்களை பரிமாறுவது தொடர்பிலான முக்கிய உடன்படிக்கையும் எட்டுவதற்காக இதன் பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக நகர திட்டமிடல் நீர்விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. இலங்கை உளவியல் சங்கத்தை கூட்டிணைத்தல்.

இலங்கை உளவியல் சங்கத்தை கூட்டிணைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால அவர்களினால் தனிப்பட்ட பாராளுமன்ற திருத்த சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சட்ட வரைவு தொடர்பான அமைச்சரவையின் துணைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் திருத்த சட்ட வரைவு பிரிவினால் திருத்த சட்ட மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள உத்தேச திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் மும்மொழில் அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிடுவதற்குமாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

10. இரத்த சோகை மற்றும் இரத்த சோகை தொடர்பான பிரச்சினைகளை குறைத்துக்கொள்வதற்காக பொதுவாக பயன்படுத்தப்படும் முக்கிய இரும்பு சத்துடனான உணவு மற்றும் போலிக் அமிலம் பயன்படுத்தப்பட்ட போஷாக்குள்ள உணவை மேற்கொள்ளுதல்

அமைச்சரவையினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த அங்கீகாரத்திற்கு அமைவாக அரிசி மற்றும் கோதுமை மாவில் இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலத்தை ஒன்று சேர்த்து போஷாக்குடனான உணவு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இரும்பு சத்து மற்றும் போலிக் அமிலத்தை பயன்படுத்தி அரிசி மற்றும் கோதுமை மா உள்ளிட்ட பிரதான போஷாக்குள்ள உணவை பாடசாலை பகலுணவு வேலைத்திட்டத்தில் முன்னெடுக்கப்படுவதை ஆய்வு செய்து பாராட்டுதல் மற்றும் போஷாக்குள்ள அரிசி முதலான தானியங்களை நாட்டில் உற்பத்தி செய்தல் தொடர்பிலான அந்தக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளத.

11. நெல் உற்பத்தி காணிகளின் நீர் மற்றும் சுற்றாடல் கட்டமைப்பு தொடர்பாக சர்வதேச வலைப்பின்னலின் 17ஆவத செயற்பாட்டக் குழுவின் கூட்டம் மற்றும் மகாநாடு

நெல் உற்பத்தி காணிகளில் சுற்றாடல் கட்டமைப்பில் நம்பிக்கையுறுதியுடன் கவனம் செலுத்தி உரிய நீர்முகாமைத்துவம் ஒன்றை முன்னெடுக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நெல் உற்பத்தி காணிகளில் நீர் மற்றும் சுற்றாடல் கட்டமைப்பு தொடர்பான ‘சர்வதேச நீர் வலைப்பின்னல் 2004’ அமைக்கப்பட்டது. இந்த மன்றத்தின் 17ஆவது நடவடிக்கை குழுவின் கூட்டத்தையும் வருடாந்த மகாநாட்டையும் அமைப்பின் அங்கத்துவ நாடுகள் மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் பங்களிப்புடன் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பில் நடத்துவதற்கும் அதற்குத் தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்குமாக விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசன மற்றும் கடற்றொழில் நீரியியல் வள அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. விலங்குகளின் உணவுக்காக தேவையான சோளத்தை இறக்குமதி செய்தல்

2019ஆம் ஆண்டில் சோள உற்பத்தி போதுமானதாக இல்லை என்பதினால் மிருக உணவு உற்பத்திக்காக 80ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கான தேவை இருப்பதாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்காக முதலாவதாக விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அபிவிருத்தி அமைச்சரின் சிபாரிசின் அடிப்படையில் தேசிய உணவு மேம்பாட்டு சபையினால் 50ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்து கால்நடை நிருவாகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் கோரிக்கையின் அடிப்படையில் விநியோகிப்பதற்கும் இரண்டாவதாக எஞ்சியுள்ள சோளத்தை தேவைப்படும் ஒவ்வொரு நிறுவனங்களினாலும் தயாரிக்கப்படும் விலங்கு உணவின் அளவு மற்றும் வளர்க்கப்படும் மிருகங்களின் அடிப்படையில் விலங்குகளின் உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட கால்நடை உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் கோழி விற்பனை வியாபாரிகளுக்கு 2020 ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்து கொள்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுப்பதற்கும் இதற்காக 1 கிலோ சோளத்திற்கு 10ரூபா விசேட வர்த்தக பொருட்கள் வரியை விதிப்பதற்கும் விவசாய திணைக்களத்தின் மூலம் சோள உற்பத்தியில் ஈடுபடுவதற்கான ஊக்குவிப்பு முறையொன்றை ஏற்படுத்தி உற்பத்தியில் ஈடுவோருக்கு இலவசமாக விதைகளை வழங்குவதற்காகவும் விவசாயம் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் கிளை அலுலகத்திற்கு புதிய கட்டிடமொன்றை நிர்மாணித்தல்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்குட்பட்ட சுயாதீன நிறுவனமாக செயற்படும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் பணியாளர்கள் 2009அம் ஆண்டு தொடக்கம் பெற்றுக்கொண்ட டுiபாவ வாகன அனுமதி பத்திரத்தை புதுப்பித்தல் 2017ஆம் ஆண்டில் மார்ச் மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதினால் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகவும் செயல்திறன் மிக்கதாகவும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காக நாடுமுழுவதிலுமுள்ள 25 கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கம்பஹா வெரஹர குருநாகல் கண்டி மற்றும் அநுராதபுர கிளை அலுவலகங்களிற்காக கூடுதலான சேவை பயனாளிகள் வருகின்றனர். இதற்கமைவாக முறையான பெறுகை நடைமுறையை கடைபிடித்து தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தி வெரஹர குருநாகல் மற்றும் அநுராதபுரம் கிளைகளுக்காக முன்னர் அமைக்கப்பட்ட கட்டிடம் கம்பஹா மற்றும் கண்டி கிளைகளுக்காக நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் எரிசக்தி செயல்திறனை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தி;ன் கீழ் மொனராகலை நீர் மின் உற்பத்தியை நிலையத்தை அமைத்தல்

மொரகொல்ல நீர் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தல் – லோட் யு2 – பிரதான சிவில் பணிகளுக்கான கேள்வி மனு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழவின் சிபாரிசுக்கு அமைவாக ஊhiயெ புநணாழரடிய புசழரி உழ டiஅவைநன ழக வுழறநச கு. ழுஉநயn ஐவெநசயெவழையெட ஊநவெநச 2008 உலைரளெi டீநடைi ஊhயழலயபெ னுளைவசiஉவ . டீநதைiபெ ஊhiயெ என்ற நிறவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. உரப் பெறுகையை மேற்கொள்ளல் 2019 

வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான உரத்தின் தேவையை விநியோகிப்பதற்காக 30ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா (கிரனியுலா) வை 1 மெற்றிக் தொன் 315.80 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையிலும் அக்ரிபேர்ட் லைவன் இன்டர்னெஷனல் பிரைவட் லிமிடட்டிடமும் 20ஆயிரம் மெற்றிக்தொன் மியுரேட் ஒப் பொடேஸை 343.10 அமெரிக்க டொலர் வீதமும் சுவிஸ் சிங்கப்பூர் ஓவர்சீஸ் என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமும் பெறகையை மேற்கொள்வதற்காக அனுமதியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு விவசாய கிராமிய பொருளாதார அலுவல்கள் நீர்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவியின் கீழ் கோபுர கட்டமைப்ப மீது நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவாயில் திட்டத்திற்கான சிவில் பணி ஒப்பந்தத்தை வழங்குதல்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் கோபுர கட்டமைப்பில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நுழைவாயில் வீதி திட்டத்தின் சிவில் பணி ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்கழுவின் சிபாரிசுக்கமைய ஊhiயெ ஊiஎடை நுபெiநெநசiபெ ஊழளெவசரஉவழைn ஊழசிழசயவழைnஇ ர்ரடிநi Pசழஎinஉயைட சுழயன யனெ டீசனைபந புசழரி ஊழ. டுவன யனெ ர்நயெn Pசழஎinஉயைட ஐளெவவைரவந ழக ஊழஅஅரniஉயவழைளெ Pடயnniபெ யனெ னுநளபைn ஐளெவவைரவந ஊழ. டுவன. என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17. 2020ஆம் ஆண்டில் இலவசமாக விநியோகிப்பதற்கு தேவையான பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்காக அச்சகங்களிடம் கையளித்தல்

அச்சு நிறுவனங்களினால் 2020ஆம் ஆண்டுக்காக நூல்களை அச்சிடுவதற்காக பகிரங்க பெறுகை நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக கேள்வி மனுக்களை சமர்ப்பித்தவர்களுள் ஆகக்குறைந்த கேள்வி மனுக்களில் பேரம் பேசுதலுக்கு அமைவாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கேள்வி விலைக்கு கேள்வி மனுதாரர்களின் அச்சு வலு மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு விநியோகித்தல் போன்ற விடயங்களும் அமைச்சரவை பெறுகைக்குழவின் சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு தெரிவுசெய்யப்பட்ட 29 அச்சு நிறுவனங்கள் ஊடாக பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2020ஆம் ஆண்டுக்காக பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ள பாடப்புத்தகங்கள் அமைச்சரவை பெறுகைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பெறுகைக் கால அட்டவணைக்காக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு விநியோகிகக்கக்கூடிய வகையில் மேற்படி 29 அச்சு நிறுவனங்களுக்கு வழங்கி 386 பாடப்புத்தக வகைகளின் 33 712 100 அளவிலான பிரதிகளை 398 2299 535.00 ரூபாவை ஒதுக்கீடு செய்து அச்சிடுவதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பகிரவும்...