Main Menu

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு பயணத்தடை!

அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நைஜீரிய அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளது.

நைஜீரியாவில் புதிதாக ஐவர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி சீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, நோர்வே, பிரித்தானியா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பதிவாகியுள்ள அனைத்து நாடுகளுக்கும் குறித்த பயணத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நைஜீரியாவின் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...