Main Menu

அமெரிக்காவை எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான்

அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் எதிர்க்க மத்திய கிழக்கிலுள்ள அனைவரும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும் என்று ஈரான் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

கத்தார் இளவரசர் தமிம் பின் ஹமத் அல் தானியுடனான சந்திப்பில் ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி இதனை தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது அயதுல்லா அலி காமெனி கூறுகையில், ‘ஊழல் நிறைந்த அமெரிக்கா மற்றும் அதன் நட்புகளால் இப்பிராந்தியத்தில் சாதகமற்ற சூழல் நிலவுகிறது. இதனை எதிர்ப்பதற்கு ஒரே தீர்வு பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் இருக்க வேண்டும்’ என கூறினார்.

கடந்த 3ஆம் திகதி அமெரிக்காவின் ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதலால், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

தற்போது, மீண்டும் ஈரான், ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் ‘அன் அல் ஆசாத்’ மற்றும் ‘ஹாரிர் கேம்ப்’ ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து; தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.

பகிரவும்...