Main Menu

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு – 6 பேர் வரையில் உயிரிழப்பு

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் கிங் சூப்பர் என்ற பல்பொருள் அங்காடியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது.

குறித்த பல்பொருள் அங்காடியில் நுழைந்த மர்ம நபரொருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்த பொலிஸார் அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் அட்லாண்டாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் அங்கு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...