Main Menu

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள வணிக வளாகம் அருகே மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சொந்த பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இதனால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

எனினும் குடியிருப்பு வாசிகள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

எனினும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அங்கு தொடர்ந்தும் அரங்கேறி வருகின்றன.

இதற்கு முன்னர் கடந்த வியாழக்கிழமை இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள டெலிவரி நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...