Main Menu

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அமெரிக்காவில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 91ஆயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 47பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 92இலட்சத்து 12ஆயிரத்து 767பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்து 34ஆயிரத்து 177பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 29இலட்சத்து 95ஆயிரத்து 245பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16ஆயிரத்து 950பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை 59இலட்சத்து 83ஆயிரத்து 345பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...