Main Menu

அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது.

அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கொரோனா குறித்து எந்த அறிகுறியும் ரஜினிகாந்திற்கு இல்லை.

இரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் சோர்வு தவிற வேறு எந்த பிரச்சினையும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இரத்த அழுத்தம் சீரான பின்னரே அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்’ என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...