Main Menu

அனுராதபுர சிறை கலவரம்: இருவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்

அனுராதபுர சிறைச்சாலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலை தொடர்ந்து அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து சிறைச்சாலையில் இருந்து கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முற்பட்ட போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர் என சந்தேகிக்கும் கைதி ஒருவர் சில தினங்களுக்கு முன் குறித்த சிறைச்சாலையில் இனங்காணப்பட்டு அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாகவே சிறைக் கைதிகள் அமைதியற்ற விதத்தில் செயற்பட்டனர் என்றும் இதன்போது சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பகிரவும்...