Main Menu

அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலைவரம்: தமிழகத்தில் ஒரே நாளில் 700ஐ கடந்தது வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 771 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும், கொரோனா வைரஸ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலைவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் ஒரேநாளில் 771 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 516 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.

இதனைவிட, வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மாநிலத்தில் மொத்த உயிரிழப்பு 35 ஆக அதிகரித்துள்ளது.

பகிரவும்...