Main Menu

அண்ணா சிலைக்கு முதலமைச்சர்- துணை முதலமைச்சர் மரியாதை

அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

சென்னை- அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்துக்கு  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவிலேயே  முதலமைச்சர், துணை முதலமைச்சர்  ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

குறித்த நிகழ்வில் அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அண்ணாவின் பிறந்த தினமான செப்டெம்பர் 15 ஆம் திகதி, ஒவ்வொரு ஆண்டும் அரச விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...