Main Menu

அசாம் கனமழைக்கு 89 பேர் உயிரிழப்பு!

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக் காரணமாக இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த அனர்த்த நிலைமையின் காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக 26 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளதுடன், 26 இலட்சத்து 31ஆயிரத்து 343பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 1 இலட்சத்து 15 ஆயிரம் ஹெக்டேயருக்கும் மேற்பட்ட நிலப்பரப்புகள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...