விக்ரம் லேண்டருடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை – நாசா

இஸ்ரோ அனுப்பிய சந்திரயாண் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவியுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை என நாசா அறிவித்துள்ளது.
நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் முகமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 2 விண்கலத்தை அனுப்பிவைத்துள்ளனர்.
குறித்த விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்கள் இருந்த சந்தர்ப்பத்தில் விக்ரம் லேண்டருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான சமிக்ஞை துண்டிக்கப்பட்டது.
இருப்பினும் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்படுவதாகவும் அதன் மூலம் விக்ரம் லேண்டரை கண்டுப்பிடிக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.
இதன்படியே சமீபத்தில் விக்ரம் லாண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் விழுந்துள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து விக்ரம் லேண்டருடன் தொடர்பினை மேற்கொள்ளும் முயற்சியில் இஸ்ரோவுடன், நாசா விண்வெளி மையமும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டது.
இதன்படி விக்ரம் லேண்டர் கருவிக்கு ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ‘ஹலோ’ என்ற செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த கருவியுடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை என நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.