Main Menu

அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் கோர விபத்து – 10 பேர் பலி, 30 பேர் காயம்

புத்தாண்டு தினமாகிய இன்று (01) அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் வரை காயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய சாரதி, மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
நியூ ஆர்லியன்ஸ் – போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...
0Shares