Main Menu

Toulouse – உணவில் விஷம்! – ஓய்வகத்தில் இடம்பெற்ற ஐந்தாவது மரணம்!!

உணவில் விஷம் கலந்ததால், ஓய்வகம் ஒன்றில் தொடர் இறப்புக்கள் பதிவாகி வருகின்றது. இன்று ஐந்தாவது இறப்பு பதிவாகியுள்ளது.  Toulouse நகரின் தென்மேற்கு பிராந்தியமான Lherm இல் உள்ள ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கான காப்பகத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, உணவில் விஷம் கலந்ததாக மயக்கமடைந்த 14 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரவு உணவில் விஷம் கலந்தது எப்படி என்பது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.  இந்நிலையில், இன்று திங்கட்கிழமை காலை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்த ஓய்வகத்தில் இடம்பெறும் ஐந்தாவது துர் மரணமாகும். இது தொடர்பான விசாரணைகளை Toulouse நகர காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பகிரவும்...