Main Menu

Saint-Lazare தொடருந்து நிலையத்தில் தாக்குதல் முயற்சி

அல்லா அக்பர் என கோசமிட்டுக்கொண்டு அதிகாரிகளை தாக்க முற்பட்ட ஒருவரை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை இரவு Saint-Lazare தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை என பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். முகக்கவசம் அணிந்துவிட்டு பயணத்தை தொடருமாறு அவர்கள் வலியுறுத்த, குறித்த நபர் குரலை உயர்த்தி அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தி ஒன்றை உருவி எடுத்து அதிகாரிகளை தாக்க முற்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் நான்கு அதிகாரிகள் நின்றிருக்க, நால்வரையும் கண்மூடித்தனமாக தாக்க முற்பட்டதுடன், அல்லா அக்பர் எனவும் கோஷமிட்டார்.

இதனால் அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு தடவைகள் குறித்த நபர் சுடப்பட்டார்.

பின்னர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அல்லா அக்பர் என கோஷமிட்டதால் இத்தாக்குதலில் பயங்கரவாத தொடர்பு உள்ளதா எனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்த முற்பட்ட நபரை உளவுத்துறையினர் முன்னதாக அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...