இலங்கை
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம்

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதுஇ தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில்மேலும் படிக்க...
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சனை; எடப்பாடியுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நேற்றிரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, ஏக்கிய இராச்சியமேலும் படிக்க...
கெஹல்பத்தர பத்மேவின் சாட்சியத்தின் அடிப்படையில் துப்பாக்கி, வெடிமருந்துகள் மீட்பு

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஒரு தொகை வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் துறையின் (CID)மேலும் படிக்க...
மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பேணவும் அமைதியான சூழலை உறுதி செய்யவும் அனைத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மேலும் படிக்க...
நூற்றாண்டு விழாவை இன்று கொண்டாடும் இலங்கை வானொலி

நாட்டின் மின்னணு ஊடகங்களின் முன்னோடியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC), இன்று (16) அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் ஆளுநர் ஹக் கிளிஃபோர்டின் முயற்சியின் கீழ், இலங்கை வானொலி சேவைகள் 1925 டிசம்பர் 16 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. இங்கிலாந்தில்மேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப் பட்ட துருக்கி விமானம்

துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றுமேலும் படிக்க...
‘இ-நீதிமன்றம்’ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை உத்தியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் உருமாற்றச் செயல்பாட்டின் ஆரம்ப கட்டமாக, தற்போதுமேலும் படிக்க...
25,000 கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பேரிடர்மேலும் படிக்க...
மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான மனிதாபிமான பணியை முடித்துக்கொண்டு 31 பேர் கொண்ட ஜப்பானிய மருத்துவக் குழு நேற்றிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜப்பான் பேரிடர் நிவாரண நிறுவனத்தின் (JDR) ஒரு பகுதியாகமேலும் படிக்க...
இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (15) அலரி மாளிகையில் இடம்பெற்றது. ‘திட்வா’ புயலைத் தொடர்ந்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்கட்டமைப்பு மற்றும் புனர்வாழ்வு முயற்சிகள் குறித்துமேலும் படிக்க...
தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கனேமுல்ல சஞ்சீவ’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிமேலும் படிக்க...
சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் மீள்புனரமைப்பு செய்யப்பட்டு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கடற்றொழில்மேலும் படிக்க...
டித்வா பேரிடரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிப்பு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பிறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களை வழங்குவதற்காக நடமாடும்மேலும் படிக்க...
இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டி.எஸ்.டி சில்வா காலமானார்

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டி.எஸ். டி சில்வா (D.S. de Silva) தனது 83 ஆவது வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாகமேலும் படிக்க...
ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு
இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (16) ஆரம்பமாகியுள்ளன. எனினும், மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சுமேலும் படிக்க...
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி,மேலும் படிக்க...
சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டு வருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்தியா செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சிறீலங்கா அரசு ஏக்கியிராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல்மேலும் படிக்க...
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் சீரற்ற வானிலை காரணமாக 391,401 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,364,481 பேர்மேலும் படிக்க...
விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 02 கிலோ 300 கிராம் நிறையுடைய போதைப்பொருள்மேலும் படிக்க...
நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களை 3மாதத்திற்குள் மீள குடியமர்த்த நடவடிக்கை

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 6,138மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- …
- 468
- மேலும் படிக்க
