இலங்கை
அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய அலி சப்ரி கொழும்பு துறைமுக நகரத்திற்கு விஜயம்
கொழும்பு துறைமுக நகரில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (திங்கட்கிழமை) நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விஜயத்தின்போது போது நீதி அமைச்சர் அலி சப்ரி துறைமுக நகர அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். துறைமுகமேலும் படிக்க...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்!
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று, தனது 68 ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்குமேலும் படிக்க...
ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு சுரேன் ராகவன் விஜயம்!
ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் ஓட்டுத் தொழிற்சாலையின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். கைத்தொழில் அமைச்சின் ஊடாக அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு மீள்ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையின் மூலம் ஒட்டிசுட்டான்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் ஆரம்பித்த கடல் வழி போராட்டம் யாழில் நிறைவு!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை 9.30 மணியளவில் வந்தடைந்தது. இழுவை மடி மீன்பிடிமேலும் படிக்க...
நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் கோரிக்கை!
பண்டேரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு 3 தகவல் அறியும் உரிமை விண்ணப்பப்படிவங்களைத் தாக்கல் செய்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கே இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 1975மேலும் படிக்க...
இரு வாரத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
ஒக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சரிந்த சுற்றுலாத் துறை இப்போது படிப்படியாக மீண்டு வருகிறது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தமேலும் படிக்க...
அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ
ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலைமேலும் படிக்க...
இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது – வேலுகுமார்
2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது.” என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்குமேலும் படிக்க...
விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் – மைத்திரி
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கட்சியின் மத்திய குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கையை ஆதரிப்பதாகவும் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக்மேலும் படிக்க...
கனவுகளின் நாயகன் கலாமின் 90 ஆவது ஜனன தினம் யாழில் இன்று அனுஷ்டிப்பு!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90 ஆவது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்துல் கலாமின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதைமேலும் படிக்க...
‘நாளையை நோக்கிய இலங்கை’ என்ற தேசிய நடவடிக்கை ஆரம்பம்
‘நாளையை நோக்கிய இலங்கை’ என்ற தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மரபு ரீதியான சிந்தனைகளைக் கடந்து, எதிர்காலத்தை நோக்கிய புதிய சிந்தனைகளின் ஊடாக அறிவின் துணையோடு முன்னேற்றகரமான பொருளாதார முறையை கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் என கூறப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ்மேலும் படிக்க...
யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிப்பு- சரத் வீரசேகர
கடந்த 10 வருடங்களில் 27ஆயிரம் பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நடைப்பெற்ற 30 வருடப் போரில் கூட 29 ஆயிரம் பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வீதிமேலும் படிக்க...
திருமண வைபவம் உள்ளிட்ட சில நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி!
புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மண்டபங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடையக் கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்துகொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்தமேலும் படிக்க...
ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது, தலா இரண்டு 50 இலட்சம் ரூபாய்மேலும் படிக்க...
13 வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் – செல்வம்
13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில்மேலும் படிக்க...
ஜனாதிபதியை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியம் சுவாமி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு,மேலும் படிக்க...
அயல்நாட்டின் உறுதிப்பாட்டை இந்தியா உயர் மட்டத்தில் எதிர் பார்ப்பதாக இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார்.மேலும் படிக்க...
அடுத்த வருடம் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் – ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை
அரசாங்கத்துக்கு முறையான வேலைத்திட்டம் இல்லாத காரணத்தினாலேயே நாடு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். விவசாயிகளுக்கான இரசாயண உரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதார நெருக்கடிக்குமேலும் படிக்க...
மாகாணசபை முறைமை தமிழர்களுக்கு தீர்வாகாது – சிவாஜிலிங்கம்
மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டாலும் அதனை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு இருக்கின்றபோதும் அதனைமேலும் படிக்க...
ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப் பட வேண்டும் – இரா.சம்பந்தன்
தமிழ் மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் அவர்கள் ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்திக்கொள்கின்ற வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய வகையில், தமது ஜனநாயக உரிமைகளுக்கு முறையான அங்கீகாரம் இருக்க வேண்டும் என்றமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- …
- 256
- மேலும் படிக்க