இலங்கை
யாழ்.மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் யுவதி கைது!
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையை காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவிமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சர்வக்கட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு குறித்த மாநாடு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாநாட்டிற்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும்மேலும் படிக்க...
ஜனாதிபதிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினை சந்திப்பதற்கான நேரத்தினை ஒதுக்கித்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக கோரிக்கைமேலும் படிக்க...
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை – வர்த்தமானி அறிவித்தல்
367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் அனுமதிப்பத்திரம் இன்றி அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உரிம முறையின் கீழ், ஒவ்வொரு இறக்குமதியாளரும் தங்கள் இறக்குமதிகளைமேலும் படிக்க...
பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ள முக்கிய 7 நிறுவனங்கள்
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளன. நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் அறிவிப்பு
உக்ரைனில் இருந்து வெளியேறமுடியாது என 27 இலங்கையர்கள் அறிவித்துள்ளனர். கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 15 மாணவர்கள் உட்பட உக்ரைனில் 81 இலங்கையர்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
டொலருக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு இடை நிறுத்தம் – மத்திய வங்கி ஆளுநர்
வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபாய் வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார். அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய வங்கிமேலும் படிக்க...
இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது
தமிழர்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவை மீறி ஏனைய நாடுகள் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகிக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்தார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா.வில் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினை தொடர்பாக உரியமேலும் படிக்க...
அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் கூட்டமைப்பினர் செயற் படுகின்றனர்- முன்னணி குற்றச்சாட்டு
அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. அதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றார்கள் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுரேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்றமேலும் படிக்க...
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!
சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சியும் இடம்பெற்றது.மேலும் படிக்க...
தொடர் துன்புறுத்தலை நிறுத்துங்கள் – இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய அமெரிக்கா
சிவில் சமூகம், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நேற்று பேசிய அமெரிக்கா, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான இலங்கையின் முயற்சியையும் 40க்கும்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்ட சட்ட மூலத்தை நிறைவேற்ற பெரும்பான்மை அவசியம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் பல பிரிவுகளை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான தனது தீர்மானத்தை உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு வழங்கிய நிலையில் அதனை சபாநாயகர் மஹிந்த யாப்பாமேலும் படிக்க...
தொடரும் இராணுவ மயமாக்கல் குறித்து பிரித்தானியா கவலை
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை வரவேற்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் பொறுப்புக்கூறலில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாதது மற்றும் மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை சிவில் சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. தலையிட வேண்டும் – கர்தினால்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தலையிட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில்மேலும் படிக்க...
சர்வதேச மகளிர் தினத்தினை கறுப்பு தினமாக பெண்கள் அனுஸ்டிக்க வேண்டும்!
சர்வதேச மகளிர் தினத்தினை கறுப்பு தினமாக பெண்கள் அனுஸ்டிக்கவேண்டும் என உள்ளுராட்சிமன்ற பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ளுராட்சிமன்ற பெண்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) காந்திபூங்காவில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெண்கள்மேலும் படிக்க...
சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் அபாயம், ஏற்கனவே 1500 உணவகங்கள் மூடல்
மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பல உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களில் உள்ள சுமார் 1500 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர்மேலும் படிக்க...
ஆளும்கட்சி உறுப்பினரின் தலைமையில் சஜித் அலுவலகம் மீது முட்டைவீச்சு
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக வளாகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தது என்பதை கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தினர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வலிந்து காணாமல்மேலும் படிக்க...
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் – வாசுதேவ!
எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்மூலம் நாளைய தினம்(திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சு பதவிகளில் இருந்து உதய கம்மன்பில மற்றும் விமல்வீரவங்ச ஆகியோர் நீக்கப்பட்டதன்மேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் – ஹக்கீம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். சில விடயங்களை மூடி மறைப்பதற்காகவே அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீது அவசரமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- …
- 256
- மேலும் படிக்க