இலங்கை
நிதி அமைச்சராக இன்று பதவியேற்கின்றார் பந்துல குணவர்தன
முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (புதன்கிழமை) நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அறியமுடிகின்றது. இவரது நியமனம் உறுதி செய்யப்பட்டால் ஒரு வாரத்திற்குள் இலங்கையில் பதவியேற்கும் 3 ஆவது நிதி அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க...
அமைதியான முறையில் பதற்றத்தை கட்டுப் படுத்துங்கள் – ஐ.நா மனித உரிமை அலுவலகம் வலியுறுத்து
பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறும் போராட்டங்களை அமைதியான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் திடீர் தட்டுப்பாடு மற்றும் மோசமானமேலும் படிக்க...
மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை, நீர்தாரை பிரயோகம்!
தங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் செய்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பாரியளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில் பிரதமர் மஹிந்தமேலும் படிக்க...
ஜனாதிபதி முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தது எதிர்க்கட்சி!
தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. கட்சி தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்
இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தமேலும் படிக்க...
அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவினையும் மீறி பல இடங்களிலும் போராட்டங்கள்
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினையும் மீறி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையினை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு பொதுமக்கள் அதிகளவில் ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். கல்கிஸ, இரத்மலானை, கொச்சிக்கடை உள்ளிட்டமேலும் படிக்க...
பிரதமர் மஹிந்த தொடர்ந்தும் பதவியில் நீடிப்பார்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசியலமைப்பின் 49 ஆவது பிரிவிற்கு அமைய, பிரதமர் பதவி விலகவில்லைமேலும் படிக்க...
அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர் – நாளை பதவியேற்கின்றது புதிய அமைச்சரவை?
அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், உத்தியோகபூர்வ பதவி விலகல் கடிதங்கள் நாளை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாளைய தினம் புதியமேலும் படிக்க...
கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மீதான தடையினை நீக்கியது அரசாங்கம்
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை தெரிவிக்க நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் அரசியல் கட்சிகளின் வழிநடத்தல் இன்றி நடத்தப்படவிருந்தன. நேற்று நள்ளிரவு முதல் பேஸ்புக், வாட்ஸ்ஆப்,மேலும் படிக்க...
பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் – நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வைக்கின்றது அரசாங்கம்
நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சியின் பெரும்பான்மை குறைவடையலாம் என்ற அச்சம் காரணமாக, அதை சமாளிக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறுகிய காலத்துக்கு ஒத்திவைப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டங்கள் இல்லை எனத் தெரிவித்து புதுவருடத்தை முன்னிறுத்திமேலும் படிக்க...
வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம் உள்ளிட்டவற்றில் நடமாட தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியானது
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாடுவதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த காலப்பகுதியில் பொது வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அதிகரிக்கும் எதிர்ப்பு – சமூக ஊடகங்கள் முடக்கப் பட்டமை மனித உரிமை மீறலாகும் – மனித உரிமைகள் ஆணைக்குழு
சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமை மனித உரிமை மீறலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உறுதிப்படுத்தாமல் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியமை மனித உரிமை மீறல் நடவடிக்கை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.மேலும் படிக்க...
ஜனநாயக வெளிப்பாட்டிற்கு ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானது – அமெரிக்க தூதுவர்
இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். மிரிஹானவில் அமைந்துள்ள ஜானாதிபதியின் இல்லத்தினை முற்றுகையிட்டு பெரும்திரளான மக்கள் நேற்று முந்தினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இதுமேலும் படிக்க...
அவசரகால பிரகடனத்தை மீளப் பெறுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவரகால சட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி – மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி விலகினார்?
தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக ரொஷான்மேலும் படிக்க...
யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களை முன்வருமாறு கோரியும் இன்று (சனிக்கிழமை ) கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னேடுக்கப்பட்டது . யாழ் . மத்திய பேருந்து நிலையத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின்மேலும் படிக்க...
இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை
இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த மாதத்தின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார். இதன்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகமேலும் படிக்க...
தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் – சிறீதரன்
தமிழர்களுக்கான சுயாட்சி முறையிலான தீர்வு கிடைக்க பிரித்தானியா உதவ வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முதன்மைச் செயலாளர் ஹென்றி டொனாற்றியிடம்(Henryமேலும் படிக்க...
தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்க கூடாது – சுமந்திரன்
தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளில் பிளவு இருக்க கூடாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்தநாள் நிகழ்வின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் மேலும் படிக்க...
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு
பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- …
- 256
- மேலும் படிக்க