இலங்கை
உயர்தரப் பரீட்சையில் வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம்!
கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு(களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற பரீட்சையின் போது வினாத்தாள் காலதாமதமாக வழங்கப்பட்டதாக மாணவர்களும், பெற்றோரும் விசனம் தெரிவிக்கின்றனர். இன்றைய தினம் நடைபெற்ற இணைந்த கணிதபாட பரீட்சையின்போது,மேலும் படிக்க...
வவுனியா பம்பை மடுப்பகுதியில் மரத்துடன் வாகனம் மோதியதில் இருவர் படுகாயம்!
வவுனியா பம்பைமடுப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்ற கோரவிபத்தில் இருவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி இரும்பு கேடர்களை ஏற்றிவந்த கென்ரர்வாகனம் பம்பைமடு பகுதியில் வந்துகொண்டிருந்த போது வேககட்டுப்பாட்டை இழுந்து வீதியில் நின்ற மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.மேலும் படிக்க...
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம்!
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது தலைமையில் இன்று ( திங்கட்கிழமை) அலரி மாளிகையில் நடைபெற்றது. அடுத்த வார நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்தமேலும் படிக்க...
வடகொரியாவிடம் இருந்து இலங்கை ஆயுதங்களை வாங்கியதாக கூறிய பசில் பதவி விலக வேண்டும் – எதிர்க்கட்சி
கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை இலங்கை வாங்கியதாகக் கூறிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, கறுப்புச் சந்தையில் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி, வடகொரியாவிடம்மேலும் படிக்க...
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – சவேந்திர சில்வா விளக்கம்
நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். ஊடக சந்திப்பொன்றில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணங்களைக் கட்டுப்படுத்துவீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டில்மேலும் படிக்க...
இலங்கை முதலீடுகள், மீனவர்கள் பிரச்சினை குறித்து பீரிஸ் – ஜெய்சங்கர் பேச்சு
இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று (திங்கட்கிழமை) புது டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கையை பலப்படுத்தும் பொருளாதார மற்றும் முதலீட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கானமேலும் படிக்க...
மலையகத்திலும் காணி அபகரிப்பு முயற்சி – இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டது போல, மலையகப் பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க...
நாடு முழுவதும் கூட்டங்களை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன தீர்மானம்!
நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இதன்படி, முதலாவது கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு அனுராதபுரம் சல்காடு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர்மேலும் படிக்க...
ஜி.எல்.பீரிஸ் இந்தியாவுக்குப் பயணம் – மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். அவர், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா நோக்கிப் பயணிக்கவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அந்த நாட்டு அரசியல் தலைவர்களைச்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. எவ்வாறாயினும் பயங்கரவாத திருத்தச் சட்டத்தில் எந்த சீர்திருத்தமும் இடம்பெறவில்லையெனமேலும் படிக்க...
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளோம் -மஸ்தான்
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘நல்லாட்சி காலத்தில் எத்தனை அரசியல்மேலும் படிக்க...
ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்கிறது – செல்வராஜா கஜேந்திரன்
ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்கிறது. இதனை உணர்ந்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்றமேலும் படிக்க...
படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் தொடர்பாக பிரித்தானியா அவதானம்!
இலங்கையில் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியிருப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தயாராகமேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் – அறிவிப்பு வெளியானது
தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை பொது இடங்களுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம்மேலும் படிக்க...
ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியாக வழிநடத்த முடியாது – பொன்சேகா
ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பொருளாதார நிபுணர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதற்கு ஊழலற்றமேலும் படிக்க...
பொறுப்புகளை நிறைவேற்றாமல் எவரும் உரிமைகளை பற்றி பேசக்கூடாது – கோட்டாபய ராஜபக்ச
தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்துமேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம்
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை முற்றாக நீக்க கோரி பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று(வியாழக்கிழமை) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் வைத்து இதனை ஆரம்பித்து வைத்துள்ளார். பயங்கரவாதமேலும் படிக்க...
வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு பல தியாகங்களை செய்துள்ளோம் – பிரதமர்!
வரலாறு முழுவதும் சுதந்திரத்தை அடைவதற்கு இலங்கையர்களாகிய நாம் பல தியாகங்களை செய்துள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் 74வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையர்களால் பெருமிதத்துடன் கொண்டாடப்படும்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 1 இலட்சத்து 72 ஆயிரத்து 433 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 18 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 97 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர். அதேநேரம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- …
- 256
- மேலும் படிக்க