இலங்கை
இங்கிலாந்து துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை

ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, நாளை (17) இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர்மேலும் படிக்க...
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை

டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான போட்டியைக் காண ஏராளமான தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. சுமார் 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஜெட் விமானங்களின் வருகையால் பண்டாரநாயக்க சர்வதேச விமானமேலும் படிக்க...
எல்லை தாண்டிய 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.மேலும் படிக்க...
பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

மறைந்த லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் என்.எம். பெரேரா நிலையத்திற்கு நேற்று (15)மேலும் படிக்க...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை: கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு
2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சை எழுதவுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மட்டும் 26,299 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களுக்காகமேலும் படிக்க...
IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அவர் இன்று முதல் நாளைமறுதினம் வரை நாட்டில் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, அவர் அரசாங்க அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.மேலும் படிக்க...
2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 மத்திய நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை முதல் பிப்ரவரி 26-ஆம்மேலும் படிக்க...
வலி வடக்கு காணி விடுவிப்பு ஏப்ரலுக்கு முன் சாத்தியம் – அமைச்சர் சந்திரசேகரன் உறுதி

வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் காணப்படுகின்ற காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அவரை தொடர்புகொண்டு வினவியபோது இதனைமேலும் படிக்க...
ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மேலும் நால்வர் வைத்தியசாலையில்

கொழும்பு – ஜிந்துப்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிச் சூ இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் கொழும்புமேலும் படிக்க...
இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய பொதுமக்களிடம் உதவி கோரல்

தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற இரட்டை மனிதக் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இக்குற்றத்தைச் செய்த துப்பாக்கிதாரிகள் ஹோமாகம, பொத்துஅராவ வீதி, அத்துருகிரிய பொலிஸ் பிரிவு, கொட்டாவ மற்றும் மாகும்புர ஆகியமேலும் படிக்க...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
கணினி கோளாறு காரணமாக கடவுச்சீட்டு பெற முடியாதவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முன்னுரிமை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஒரு நாள் மற்றும்மேலும் படிக்க...
காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சி

கொழும்பு நகர மண்டப பகுதியில் உள்ள பூ விற்பனையாளர்கள், இந்த ஆண்டு காதலர் தின பூ விற்பனை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதிக விலை மற்றும் மக்களின் குறைந்த கொள்வனவு சக்தியே இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒருமேலும் படிக்க...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் இனவாதத்தை தூண்ட முயற்சி – திலித் ஜயவீர

திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது, நாட்டில் திட்டமிட்ட ரீதியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம் என சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அரசாங்கத்தின் மீதுமேலும் படிக்க...
டி20 உலகக்கிண்ணத் தொடருக்கு பலத்த பாதுகாப்பு – சர்வதேச சமூகத்துக்கு பாதுகாப்பு அமைச்சு உறுதியளிப்பு

இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்புமேலும் படிக்க...
கட்சி தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை – எம்.ஏ.சுமந்திரன்
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதிமேலும் படிக்க...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் நம்பகமான புகைப்படங்கள் அடங்கிய ஒரு போலி செய்தி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் (முகநூல்) பரவி வருவதாகமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம்

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்கமேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ரணில் ,மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் விருப்பத்திறகேற்ப அறுவை சிகிச்சை மூலம் தங்கள் பாலியல் அடையாளத்தை மாற்றிக்கொள்ள உதவும்மேலும் படிக்க...
சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியினால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக, குறித்த உறுப்பினர் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையினால், அவரது கட்சி உறுப்புரிமையைமேலும் படிக்க...
மஸ்கெலியா கவரவில தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளனர். தோட்ட நிர்வாகம் குறித்த 8 தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு அனுமதிப்பதாகக் கடிதத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததையடுத்து இந்தப் போராட்டம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- …
- 468
- மேலும் படிக்க
