Main Menu

தென் ஆப்பிரிக்காவில் சோகம்: குத்துச்சண்டை ஜாம்பவான் சொலானி டெடே துப்பாக்கி தாக்குதலில் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 38 வயதான முன்னாள் உலக குத்துச்;சண்டை செம்பியன் சொலானி டெடே, அவரது வீட்டின் முன் வைத்து, துப்பாக்கி தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிற்றுந்தில் அவருடன் பயணித்த 27 வயதான பெண்ணுக்கும் காயங்கள் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொலானி டெடே, றுடீகு , றுடீழு மற்றும் ஐடீகு ஆகிய பிரிவுகளில் உலக செம்பியன் பட்டங்களை வென்றவர்.

2017-ஆம் ஆண்டு உலக செம்பியன்ஷிப் போட்டியில், எதிராளியை வெறும் 11 வினாடிகளில் நொக்கவுட் செய்து ‘கின்னஸ் உலக சாதனை’ படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.