Main Menu

உலகக்கோப்பை கால்பந்து காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரெஞ்சு அணி

Philadelphieயாவில் ஜுலை மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் பிரெஞ்சு அணி 1-0 என்ற கோல் கணக்கில் Paraguay அணியை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. கடும் போராட்டமாக அமைந்த இந்தப் போட்டியில், பிரான்ஸ் அணியின் தலைவர் Kylian Mbappé பெற்ற பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன் மூலம் உலகக்கோப்பையில் ஏழாவது கோலைப் பதிவு செய்த எம்பாப்பே, அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் Lionel Messi உடன் இணைந்துள்ளார்.

Paraguay அணியின் இறுக்கமான பாதுகாப்பு காரணமாக பிரெஞ்சு அணிக்கு ஆரம்பத்திலேயே வாய்ப்புகள் கிடைக்கவில்லை. Manu Koné மற்றும் Adrien Rabiot ஆகியோரின் தூரத்தடுப்புகள் கோலாக மாறாமல் போன நிலையில், Jules Koundé போட்டியின் முதல் இலக்கை நோக்கிய தடுப்பை பதிவு செய்தார். 76 சதவீத பந்துக் கட்டுப்பாட்டை வைத்திருந்த போதிலும் பிரெஞ்சு அணியின் தாக்குதல்கள் பலனளிக்காமல் இருந்தன. பின்னர் மாற்று வீரராக களமிறங்கிய Désiré Doué மீது செய்யப்பட்ட தவறுக்காக VAR பரிசீலனைக்குப் பின்னர் வழங்கப்பட்ட பெனால்டியை எம்பாப்பே வெற்றிகரமாக கோலாக மாற்றினார்.

மற்றொரு புறம், Paraguay அணி ஆட்டத்தை விட கடுமையான மோதல்களாலும் தவறுகளாலும் அதிகமாக கவனம் பெற்றது. பல முறை பிரெஞ்சு வீரர்கள் மீது கடுமையான முறையில் விளையாடிய போதிலும் நடுவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போட்டிக்குப் பின்னர் பேசிய எம்பாப்பே, “நாங்கள் அழகான கால்பந்தை மட்டும் விளையாடுவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். தேவையானபோது கடினமான ஆட்டத்தையும் நாங்கள் விளையாட முடியும் என்பதை நிரூபித்தோம்” என்று தெரிவித்தார். காலிறுதியில் பிரெஞ்சு அணி மொராக்கோவை எதிர்கொள்ள உள்ளது.