அவசர பாராளுமன்ற விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்
அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றைக் கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்று இன்று (23) பாராளுமன்றத்தில் வைத்து சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
நீதித்துறைத் துறையில் எழுந்துள்ள கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை வழங்குவதற்கு பாராளுமன்றம் தலையிட வேண்டும் எனச் சுட்டிக்காட்டி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
