Main Menu

வாகன இறக்குமதி சுங்க வரியின் மீது மேலதிக வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரியை (Surcharge) விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு இந்த 50% மேலதிக வரி வசூலிக்கப்படவுள்ளது.

இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் (Letter of Credit) திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50% மேலதிக வரி பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 50% மேலதிக வரியைக் கடந்த ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் நீக்குவதற்கு நிதி அமைச்சு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், அதனை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.