இங்கிலாந்தில் கைவிடப்பட்ட முதலாம் உலகப் போர் கால விமான நிலையம் மீண்டும் திறப்பு
160 மில்லியன் பவுண்ட்கள் மதிப்பிலான புனரமைப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் South Yorkshire இல் அமைந்துள்ள டான்காஸ்டர் ஷெஃபீல்ட் (Doncaster Sheffield) விமான நிலையம் இந்த ஆண்டு மீண்டும் திறக்கப்பட உள்ளது.
குறித்த விமான நிலையத்தை இயக்கும் பீல் குழுமம் அதனை நிதி ரீதியாக இலபகரமற்றது எனக் கூறி கைவிட்டதால், 2022 ஆம் ஆண்டு முதல் டான்காஸ்டர் ஷெஃபீல்ட் விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் உள்ளூராட்சி மன்றங்களின் ஆதரவுடன் மீண்டும் செயல்படுத்தப்படும் இந்த லட்சியமிக்க திட்டத்தின்படி, விமான நிலையம் இந்த ஆண்டு சரக்கு விமானங்களையும், 2027 ஆம் ஆண்டுக்குள் வணிகப் பயணிகள் விமானங்களையும் மீண்டும் தொடங்கும்.
டான்காஸ்டர் ஷெஃபீல்ட் விமான நிலையம், பொருத்தமான விமான நிலைய செயல்பாட்டுப் பங்காளிகளைக் கண்டறிவதற்காக தற்போது ஃப்ளை டான்காஸ்டர் (Fly Doncaster) என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
டான்காஸ்டர் ஷெஃபீல்ட் விமான நிலையம், முதலாம் உலகப் போரின் போது ஜெர்மானிய போர்க் கப்பல்களை இடைமறிப்பதற்காக பிரிட்டிஷ் ரோயல் பறக்கும் படையால் நிறுவப்பட்ட ஒரு இராணுவ விமானத்தளமாக 1915 ஆம் ஆண்டில் முதன்முதலில் திறக்கப்பட்டது.
South Yorkshire இல் அமைந்துள்ள இந்த விமான நிலையம், ராபின் ஹூட் கதைகளுடன் தொடர்புடையதால், முன்னர் ரோபின் ஹூட் விமான நிலையம் என்றும்அழைக்கப்பட்டது.
இந்த விமான நிலையம், உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சில விமானங்களைக் கையாளும் வகையில் முதலில் வடிவமைக்கப்பட்டதால், 2,895 மீட்டர் நீளமுள்ள நாட்டின் மிக நீளமான ஓடுபாதைகளில் ஒன்றையும் கொண்டுள்ளது.
