Main Menu

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 காவல்துறையினர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவின் கடற்கரை நகரமான லடாகியா மாகாணம் அல்வாடி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த டிசம்பர் மாதம் கவிழ்ந்ததையடுத்து, சிரியாவின் புதிய ஜனாதிபதியாக ஹயத் தஹிர் அல் ஷியாம் பதவியேற்றார்.
அதேவேளை, அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சிரியா அரசுப்படைகள் மீதும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அல் அசாத் ஆதரவு கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...