Main Menu

கொரோனாவை ஒழிக்கும் மருந்து – வைத்தியரின் வீட்டைச் சூழ்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்

சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை ஒழிப்பதற்கான மருந்தினைப் பெற்றுக்கொள்ள அதிகமானோர் படையெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியில் அமைந்துள்ள வைத்தியரின் வீட்டில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குறித்த மருந்துகளை கொள்வனவு செய்ய குவிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்ட நிலையில் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் 120 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசினை குணப்படுத்த கூடிய ஆயுர்வேத மருந்து தன்னிடமுள்ளதாக கடந்த வாரம் சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டார தெரிவித்திருந்ததுடன் சுகாதார அமைச்சர் மருத்துவரின் வீட்டிற்கு சென்று மருந்தினை பயன்படுத்தி பார்த்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...