6வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.அஜய் சரண் சேகர்
டென்மார்க் Aalborg நகரில் வசிக்கும் சேகர் கயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அஜய் சரண் 26ம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை நேற்று வந்த தனது 6வது பிறந்தநாளை 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று அன்பு அக்கா ஜெரனிக்கா அன்புத்தம்பி ராம்சரண் அவர்களுடன் இணைந்து இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார்.
இன்று 6வது பிறந்தநாளை கொண்டாடும் அஜய் சரணை அன்பு அப்பா , அன்பு அம்மா, அன்பு அக்கா ஜெரனிக்கா, அன்புத்தம்பி ராம்சரண் , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பார் போற்றும் பிள்ளையாக பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 6வது பிறந்தநாளை கொண்டாடும் அஜய் சரணை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார் மாமாமார் அன்பு நேயர்கள் அனைவரும் பல்கலையும் கற்று அனைத்து வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்.
இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானொலிக்கு எடுத்து வருகின்றார் செல்வி ஜெரனிக்கா சேகர்.
அவருக்கும் எமது நன்றி