Main Menu

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் எவ்வித கொரோனா வைரஸ் தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையில் இதுவரை 190 பேர் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 133 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 50  பேர் பூரணமாக குணமாகி வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சுமார் 250 க்கும் அதிகமான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...