மெக்ஸிக்கோவில் விபத்து – ஏழு பேர் காயம்!
மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
ஹிடால்கோ மாநிலத்தின் சிமாபன் கலாச்சார மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவர்களின் பெற்றோர் பயணித்த வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தநிலையில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.