Main Menu

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – அகமத் ஹசேன்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகமத் ஹசேன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் பிற மதங்களை சேர்ந்த அகதிகளிற்கு குடியுரிமை வழங்க வேண்டும் என குடியுரிமை சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லது அவர்களுக்கு இலங்கையில் மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை  வேண்டும் ”என தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு, இந்தியா நோக்கி அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள இலங்கை மக்கள், செங்கல் பட்டு, மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மக்களுக்க தற்போது வரையில் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...