Main Menu

தேவையானளவு குருதியை வழங்க நடவடிக்கை

வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வைத்தியர்கள், தாதியர்கள் தேவையான வகையில் வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்புஇ நீர்கொழும்பு, றாகம வைத்தியசாலைகளுக்குத் தேவையானளவு குருதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, மட்டக்களப்பு சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும்இ 67 சிகிச்சை பெற்று வருவதாகவும் நீர்கொழும்பு சம்பவத்தில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு சுமார் 110 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடகொழும்பு வைத்திய சாலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 எனவும் 24 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...