Day: April 21, 2019
கொழும்பு தாக்குதலில் வவுனியாவின் பிரபல வர்த்தகரின் மகள் உட்பட வவுனியா இளைஞன் ஒருவரும் பலி!
கொழும்பு சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த இளைஞனொருவன் மற்றும் வவுனியா வர்த்தகரான PS அப்துல்லா அவர்களின் மகளும் உயிரிழந்துள்ளனர். இதன்போது வவுனியா – வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடையமேலும் படிக்க...
தற்கொலைதாரிகள் பயன்படுத்திய வாகனம் வெள்ளவத்தையில் மீட்பு? சாரதி கைது!
தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தற்கொலைதாரிகள் பயனபடுத்திய வாகனம் மீட்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் வான் ஒன்று காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 9 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 207 பேர் கொள்ளப்பட்ட நிலையில்மேலும் படிக்க...
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்! ஐநா சபை தலையிட வேண்டும்-திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக வெளியிடட கருத்து. ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் தேவாலயங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியதாக தகவல்
கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, இன்று காலை முதல் நாட்டில்மேலும் படிக்க...
புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை-ஏ.எச்.எம்.பௌசி
விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமய வழிபாடுகள் நடைபெற்றமேலும் படிக்க...
குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 207 பேர் உயிரிழப்பு, 450 பேர் காயம்!
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 450 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அவசர ஊடக சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்மேலும் படிக்க...
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. 17ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகின்ற நிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்மேலும் படிக்க...
ரஞ்சன் கோகாயிடம் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் – பெண் வழக்கறிஞர்கள்
பாலியல் முறைப்பாடு தொடர்பில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண்மேலும் படிக்க...
புலனாய்வுப் பிரிவினர், முப்படை அதிகாரிகளை அவமதித்ததன் விளைவே குண்டுவெடிப்புகள்- மகிந்த ராஜபகக்ஸ
தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த அளப்பறிய சேவையாற்றிய புலனாய்வு பிரிவினர், முப்படையின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் முக்கிய தரப்பினரை அவமதித்து கட்டுப்படுத்தியதன் விளைவு அப்பாவி மக்களை இன்று பாதித்துள்ளது. ஆகவே இத்தாக்குதலில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்கமேலும் படிக்க...
நாடு முழுவதுமான 8 குண்டு வெடிப்புகளில் 188 பேர் பலி 469 பேர் காயம்!
கொழும்பு, தெமட்டகொடை காவற் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 188 பேர் உயிரிழந்துள்ளதுடன் 469 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கையில் இன்றுமேலும் படிக்க...
சிறிலங்கா முழுவதும் உடனடியாக காலவரையற்ற ஊரடங்கு!
சிறிலங்கா முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அறிவித்துள்ளார். முன்னதாக, இன்று மாலை 6 மணி தொடக்கம், நாளை காலை 6 மணி வரை ஊடரங்குச் சட்டம்மேலும் படிக்க...
இலங்கை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர்தப்பியுள்ள நடிகை ராதிகா!
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்துள்ளது. இந்த தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘’சின்னமன்மேலும் படிக்க...
சபாநாயகர் விசேட அறிக்கை
இன்றைய சம்பவம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி பாராளுமன்றத்தின் மூலம்; மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சபாநாயகர் இலங்கை தேசிய இனத்தவர் என்றமேலும் படிக்க...
இலங்கையில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு – உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம்
இலங்கையில் இன்று காலை முதல் ஏழு இடங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்களில் குறைந்தது 187 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் குறைந்தது 187 பேர் வரைமேலும் படிக்க...
குண்டுவெடிப்புகளை அடுத்து இலங்கையில் சமூக ஊடகங்களை முடக்க அரசு நடவடிக்கை
சிறிலங்காவில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்தே சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து போலியான – உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சிறிலங்கா முழுவதும் பரப்பப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல்! – விசாரணைகளில் தெரியவந்தது
சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர். குறித்த இரண்டு சந்தேகமேலும் படிக்க...
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் – தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு
சிறிலங்கா முழுவதும் இன்று இரவு 6 மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்தே, நாடு முழுவதும் இரவு நேர ஊடரங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகமேலும் படிக்க...
இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு – இருவர் பலி
இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின்மேலும் படிக்க...