Main Menu

9வது ஆண்டு நினைவு தினம் – திருமதி வள்ளியம்மை கதிர்காமு (14/12/2022)

தாயகத்தில் இளவாலையை பிறப்பிடமாகவும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 9 வது ஆண்டு நினைவு தினம் 14ஆம் திகதி டிசம்பர் மாதம் புதன்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் அன்னையை நினைவு கூருபவர்கள் அன்பு பிள்ளைகள் கருணாகரன் (Norway), பிரபாகரன் (Canada), பிறேமா (Paris), மற்றும் அன்பு மருமக்கள் சிவராணி (Norway), சுதா (Canada), கைலாயநாதன் (paris), அன்பு பேரப்பிள்ளைகள் வாகினி, சுபாங்கன் (Norway), கோபிதன், ஜஸ்மிதன், லக்சனா (Canada), சாரங்கன், விதுசன், தீபிகா (Paris) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு பேரப்பிள்ளைகள்
வாகினி, சுபாங்கன், கோபிதன், ஜஸ்மிதன், லக்சனா, சாரங்கன், விதுசன், தீபிகா.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

ஆண்டுகள் ஒன்பது ஓடி மறைந்தாலும்- உங்கள்
அன்பான நினைவுகள் ஒரு போதும்
எமை விட்டு விலகாது அம்மா!

ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும்
மீண்டும் உங்கள் கருவறையில்
வந்துதிக்க வேண்டும் – என்ற
வரம் வேண்டும் அம்மா!

என்றும் உங்கள் அன்பு வாழ்த்துகள்
எங்கிருந்தாலும் கிடைக்க அருள் தருவாய் தாயே!

பகிரவும்...