Main Menu

8ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். திருமதி வள்ளியம்மை கதிர்காமு (16/12/2021)

தாயகத்தில் இளவாலையை பிறப்பிடமாகவும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 8 வது ஆண்டு நினைவு தினம் 16 ஆம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஸ்டிக்கப் படுகின்றது.

இன்றைய தினம் அன்னையை நினைவு கூருபவர்கள் அன்பு பிள்ளைகள் கருணாகரன் (Norway), பிரபாகரன் (Canada), பிறேமா (Paris), மற்றும் அன்பு மருமக்கள் சிவராணி (Norway), சுதா (Canada), கைலாயநாதன் (paris), அன்பு பேரப்பிள்ளைகள் வாகினி, சுபாங்கன் (Norway), கோபிதன், ஜஸ்மிதன், லக்சனா (Canada), சாரங்கன், விதுசன், தீபிகா (Paris) மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு பேரப்பிள்ளைகள்
வாகினி, சுபாங்கன், கோபிதன், ஜஸ்மிதன், லக்சனா, சாரங்கன், விதுசன், தீபிகா.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

இன்று 8வது ஆண்டில் நினைவு கூரப்படும் அன்னை வள்ளியம்மை கதிர்காமு அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து அன்பு உறவுகளும் அன்பு நேயர்களும் நினைவு கூருகின்றார்கள்.

ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்,
அன்பான நினைவுகள் என்றும்
எங்களை விட்டு மறையாது!

ஆயிரம் ஜென்மம் எடுத்து பிறந்தாலும்,
அம்மா உங்கள் கருவறையில்
மீண்டும் பிறக்கின்ற வரம் வேண்டும்!

உங்கள் அன்பு வாழ்த்துக்கள்
எங்கிருந்தாலும் கிடைக்க
அருள் பாலிப்பாய் தாயே!

பகிரவும்...