Main Menu

விமானம் ஒன்றை கடத்தி தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருந்த நபர் கைது – உள்துறை அமைச்சர்

நேற்று வியாழக்கிழமை உள்துறை அமைச்சர் Christophe Castaner தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதன்போது பல்வேறு தகவல்கள் அவர் வெளியிட்டார்.  காவல்துறை தலைமைச் செயலகத்தில் தாக்குதல் இடம்பெறுவதற்கு சில நாட்கள் முன்பாக, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் பரிசில் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். கிட்டத்தட்ட அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இணையாக இந்த தாக்குதலை திட்டமிட்டிருந்தாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த செப்டம்பர் தாக்குதலில் ஈர்க்கப்பட்டு அது போன்றே விமானம் ஒன்றை கடத்தி தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.  தவிர, கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நாம் 60 பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளோம் எனவும் உள்துறை அமைச்சர் Christophe Castaner மேலும் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...