Main Menu

60 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப் பட்டதாக அறிவிப்பு!

பிரான்ஸில் இதுவரையில் 60 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்துறை அமைச்சர் Christophe Castaner இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 60 பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தலைமைச் செயலகத்தில் தாக்குதல் இடம்பெறுவதற்கு சில நாட்கள் முன்பாக, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது குறித்த சந்தேக நபர் பரிசில் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இணையாக இந்த தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் தாக்குதலில் ஈர்க்கப்பட்டு அது போன்றே விமானம் ஒன்றை கடத்தி தாக்குதல் நடத்த சந்தேக நபர் திட்டிமிட்டிருந்ததாக உள்துறை அமைச்சர் Christophe Castaner தெரிவித்துள்ளார்.

பகிரவும்...