Main Menu

4வது ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.நாகலிங்கம் தவமணி நாயகம் (31/01/2021)

மேடை நாடக ஒலி ஒளி அமைப்பாளரும், முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன மின்சார பகுதி முகாமையாளரும், தெல்லிப்பழை துர்க்கா தேவி ஆலய நிர்வாகசபை மூத்த உறுப்பினரும், மல்லாகம் கோணப்புல ஞானவைரவர் கோவில் தலைவருமான, தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த அமரர். நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் 31ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இன்று அமரர் நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்களை நினைவு கூருவோர்: அன்பு மனைவி திலகமணி (மல்லாகம்), அன்பு பிள்ளைகள் கருணாகரன் (நோர்வே), தயானந்தன் (மல்லாகம்), இரவீந்திரன் (பிரான்ஸ்), யமுனா (மல்லாகம்), மருமக்கள் சாரதாவல்லி (நோர்வே), ரோகினி (மல்லாகம்), கேதீஸ்வரி (பிரான்ஸ்), சண்முகராஜா (மல்லாகம்), பேரப்பிள்ளைகள் கோபிசாந்த், மோகவி, ரவிசாந்த், சங்கவி, ஜாதவி, சாம்பவி, சம்புஜன், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.

இன்று 4வது ஆண்டு நினைவு நாளை நினைவு கூரும் நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் கருணாகரன், தயானந்தன், ரவீந்திரன், யமுனா.

அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...