Main Menu

2024-ல் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் – அமித்ஷா

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடேக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மதிப்பளித்து அரசாங்கம் செயற்படுவதாக கூறியுள்ளார்.

60 கோடி ஏழை இந்தியர்களுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளதாகவும் அடுத்த பிரதமர் யார் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பகிரவும்...