Day: March 27, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 316 (27/03/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
எரிபொருட்களின் விலையில் மற்றுமொரு மாற்றம்!
எரிபொருட்களின் விலை 15 சதத்தினால் குறைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த விலைக்குறைப்பு மேலும் 3 சதங்களால் குறைக்கப்பட உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இந்த புதிய விலை நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, எரிபொருட்களின்மேலும் படிக்க...
உக்ரைனின் எதிர்ப்பு கொரில்லா போராக மாறும் -ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தகவல்
உக்ரைனை இரண்டாக உடைக்க ரஷியா முயற்சி செய்யலாம் என்று உக்ரைனின் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவ உளவுப்புரிவு தலைவர் கைரிலோ புடானோவ்கீவ்:உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 32வது நாளாக நீடிக்கிறது. முதலில் ராணுவ தளங்களை குறிவைத்துமேலும் படிக்க...
புதின் ஒரு கசாப்புக் கடைக்காரர்- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆவேசம்
புதின் ஆட்சியில் நீடிக்க கூடாது என்ற ஜோ பைடன் கருத்துக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார். உக்ரைனின் அண்டை நாடானமேலும் படிக்க...
தமிழக மீனவர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது- இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்திய கடலோர பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதுமேலும் படிக்க...
கடல் கடந்து சென்று கை நிறைய ஒப்பந்தங்கள் பெற்றேன்- துபாய் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்
துபாய் பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது துபாய் பயணம் குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். ‘வணக்கம் துபாய்.. உமதுமேலும் படிக்க...
உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக கவலை
உக்ரேனில் வைத்தியசாலைகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் வைத்தியசாலைகள், நோயாளர் காவு வண்டி மற்றும் வைத்தியர்கள் மீது 70 இற்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும், குறித்த தாக்குதல் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துமேலும் படிக்க...
இந்திய வெளிவிவகார அமைச்சரினை சந்திக்கின்றது கூட்டமைப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை(திங்கட்கிழமை) இலங்கை வருகை தரவுள்ளார். நாளை இலங்கை வருகை தரவுள்ளமேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி மற்றும் கொரோனா நிலைமையினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில்மேலும் படிக்க...
முழுமையான தடுப்பூசி செலுத்தப் பட்டமைக்கான அட்டை கட்டாயம் ஆக்கப்படவுள்ள பொது இடங்கள் குறித்த பட்டியல் விரைவில்
முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் நாட்களில் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரையில் 14.4 மில்லியன் மக்கள் முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.மேலும் படிக்க...