Main Menu

தமிழக மீனவர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது- இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய கடலோர பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது ஆண்டாண்டு காலமாக நீடித்து வருகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.

மேலும் தமிழக மீன் வளத்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழக மீனவர்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டன.

அப்போது கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மீன் பிடி படகுகளை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கையில் இலங்கை கடற்படையினருடன் துணை ராணுவ படையினரை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பகிரவும்...