Main Menu

மட்டக்களப்பில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப் பட்டது

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரின் திருவுருவச்சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பாடுமீன் அரிமா லயன்ஸ் கழகத்தினால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலை மட்டக்களப்பு– ஊறணியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகத்தின் தலைவர் இ.மு.றுஸ்வின் தலைமையின் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் மற்றும் பிரதிமுதல்வர், மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியகஸ்தர் சுஜீவ விஜயசேர மற்றும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு பாராதியாரின் கவிதைத்தொகுப்படங்கிய நூல் வழங்கி வைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக உறுப்பினர்கள், அதிதிகளால் சின்னம் சூடியும் கௌரவிக்கப்பட்டனர்.

பகிரவும்...