Day: June 24, 2020
ஈழத்தமிழ் பின்னணியில் உருவாகிய ‘தாய்நிலம்’ திரைப்படம் டொரொண்டோ சர்வதேச விருதுக்கு தெரிவு
ஈழத்தமிழ் பின்னணியில் உருவாகிய ‘தாய்நிலம்’ திரைப்படம் டொரொண்டோ சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. அபிலாஷ் ஜி தேவன் என்பவர் தாய்நிலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த கதை ஒரு அப்பா மகள் பாச பிணைப்பினை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். 2008-ம் ஆண்டுமேலும் படிக்க...
கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களுக்கு மாவை அழைப்பு!
துரதிஸ்ரவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பலர் வெளியேறியிருப்பது தனக்கு மிகுந்த கவலை என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு தேர்தல் முடிந்ததற்கு பிறகு அவர்களை இணைத்து இந்த நெருக்கடியான காலகட்டத்தில், அடுத்த கட்ட நடவடிக்கைக்குமேலும் படிக்க...
கருணா குறித்து பேசுபவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியவர்களை மறந்து விட்டனர் – மஹிந்த
முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை அரசியலாக்கும் எதிர்தரப்பினர், விடுதலைப் புலிகளுக்கு யார், ஆயுதம் வழங்கியது என்பதை மறந்து விட்டார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்தோடு, கருணாவின் வரலாறு ஒன்றும் இரகசியமல்ல,மேலும் படிக்க...
“மெல்லிசை மன்னர்” (பிறந்தநாள் கவி)
பாலக்காட்டில் ஆனித்திங்கள்24 இல் உதித்து தாளக்கட்டு எமைக் கட்டிப்போட ஆர்மோனியப் பெட்டியால் மெட்டுப் போட்டு எம் ஹார்மோன்களை எல்லாம் எழிற்சி பெற வைத்த இசையுலகின் முடிசூடா மன்னனே ஏழிசையின் இமயமே ! உலக இசையைத் தமிழில் புகுத்தி தமிழிசைக்கு புகழும் சேர்த்துமேலும் படிக்க...
சிங்கப்பூர் – 13 ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிங்கப்பூரின் 13 ஆவது நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் பொதுத் தேர்தல் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாம் கட்டத் தளர்வின்போது நடைபெறும் என சிங்கப்பூரின் பிரதமர்மேலும் படிக்க...
கொரோனாவால் உயிர் இழந்தவர்களில் 75 சதவீதம்பேர் போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப் பட்டவர்கள்?
மத்தியப்பிரதேசம் தலைநகர் போபால் நகரில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் 75 சதவீதம் பேர் 1984-ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயு கசிவில் பாதி்க்கப்பட்டு உயிர்தப்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஜூன் 11ஆம் திகதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் போபால் நகரில் 60 பேர்மேலும் படிக்க...
உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளில் பரவிமேலும் படிக்க...
டெல்லியில் ஒரு இலட்சம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட மருத்துவமனை – 10 ஆயிரம் படுக்கைகள்!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லியில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகத்துக்கு அடுத்தபடியாக டெல்லியில்தான் கொரோனா தொற்று அதிகளவில் காணப்படுகிறது. அங்கு நாள்தோறும் சுமார் 3,000 பேர் இந்தமேலும் படிக்க...
ஜனாதிபதி தொடர்பாக மங்கள மஹிந்தவுக்கு கடிதம்
மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உயர் மட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக விமர்சித்து மக்கள் மத்தியில் ஏளனத்துக்குள்ளாக்கியுள்ளமை பொருளாதார ரீதியில் எவ்வித ஆக்கப்பூர்வமான நுட்பம் ஜனாதிபதிக்கு கிடையாது என்பதை எடுத்துக்காட்டியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர்மேலும் படிக்க...
அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகின்றது!
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று(புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜயதுங்க ,ந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் – சர்வதேச அமைப்புக்கள் கோரிக்கை
ஊடகவியலாளரும் மனித உரிமை பாதுகாவலருமான தரிஷா பஸ்டியனின் பாதுகாப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு, எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு, சர்வதேச மன்னிப்புச்சபை, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்,மேலும் படிக்க...