Main Menu

200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஆபிரிக்காவுக்கு வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!

உலகளாவிய அளவில் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம், 200 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகளை ஆபிரிக்காவுக்கு வழங்கவுள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தனது ஐரோப்பிய நாடாளுமன்ற உரையில்,

‘அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முழுமையாக வழங்கப்பட வேண்டிய புதிய நன்கொடை ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட 250 மில்லியனுக்கும் மேல் வந்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் சவாலை அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றிய தீர்மானத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இது ஒற்றுமைக்கான முதலீடு. உலக சுகாதாரத்துக்கான முதலீடு. 700 மில்லியன் டோஸ்களை ஐரோப்பியர்களுக்கு வழங்கியதற்கு மேல், 27 நாடுகளின் கூட்டமைப்பு 130 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது.

இதை அடைவதற்கு உலகின் ஒரே பிராந்தியம் நாங்கள் மட்டுமே. உலகளாவிய தடுப்பூசியை விரைவுபடுத்துவதே எங்கள் முதல் மற்றும் மிக முக்கியமான முன்னுரிமை.

உலகளவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே ஏழை நாடுகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முரண்பாட்டைக் களையும் வகையில் உலகளாவிய தடுப்பூசி திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்போம். இது தடுப்பூசி போடாதவர்களின் தொற்றுநோயாக மாறாமல் இருக்க முடிந்த அனைத்தையும் செய்வோம்.

ஆபிரிக்காவில் தடுப்பூசி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக இந்த கூட்டமைப்பு 1 பில்லியன் யூரோக்களை (1.2 பில்லியன் டொலர்கள்) முதலீடு செய்கின்றோம்’ என கூறினார்.

ஆபிரிக்க சுகாதார அதிகாரிகள் கண்டத்தின் மக்கள்தொகையில் 60 சதவீதம் தடுப்பூசி போட 800 மில்லியனுக்கும் குறைவான டோஸ் தேவை என்கிறார்கள். கடந்த வாரம் நிலவரப்படி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆப்பிரிக்கா மையங்களின்படி, 145 மில்லியன் டோஸ் வாங்கப்பட்டுள்ளது.

1.3 பில்லியன் மக்கள் கொண்ட கண்டத்தில் வெறும் 3.5 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது

பகிரவும்...