Main Menu

20வது ஆண்டு நினைவுதினம் – அமரர் திருமதி. பொன்னையா செல்லம்மா (09/02/2023)

மலேசியாவை பிறப்பிடமாகவும் தாயகத்தில் சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்னையா செல்லம்மா அவர்களின் 20வது ஆண்டு நினைவுதினம் 9ஆம் திகதி பெப்ரவரி மாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

இன்று 20வது ஆண்டு நினைவுதினத்தை அன்பு பிள்ளைகள் தாயகத்தில் வசிக்கும் இராஜலட்சுமி,விஜயலட்சுமி, வரதலட்சுமி, குலேந்திரராஜா, தனலட்சுமி(தேவி France )
சுலோசனாதேவி(தாயாகம்) மருமக்கள் தாயகத்தில் வசிக்கும் குலசேகரம், மகேந்திரலிங்கம், விஜயராணி, தனராஜ்(France), இராசலிங்கம் (தாயகம்), சகோதரி சரஸ்வதி (France), பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அம்மாவை நினைவுகூருகின்றார்கள்.

இன்று 20வது ஆண்டில் நினைவு கூரப்படும் அம்மா பொன்னையா செல்லம்மா அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் இன்றைய நாளில் நினைவு கூருகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் தேவி தனராஜ் குடும்பம்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

அம்மா உனக்கோர் அஞ்சலி

ஆண்டுகள் 20 எப்படி ஓடியது
தெரியவில்லை அம்மா!
உங்களை நாங்கள் நினைக்காத நிமிடம்
இருக்கும் என்றால்… அது இல்லை அம்மா!
எந்த வேளையிலும் உங்களை நினைத்துத்தான்
நாங்கள் துடிக்கிறோம் தாயே!

தைபூச நன்னாளிலே முருகன்

உங்களை அழைத்தாரோ?

மீளாத்துயில் கொண்டு எம்மை
ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்டு
காத தூரம் சென்றீர்களே அம்மா!
கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
கண்ணீர் துளிகளை காணிக்கை ஆக்குகின்றோம்!

அன்புக்கும் பண்பிற்கும் ஓர் தாயாய்
இப்புவியில் பெருமை சேர்த்த தாயே!
மீண்டும் பிறப்பொன்று இருந்தால்
நீயே எங்கள் தாயாக வேண்டும் என்று
நாகம்மாவை வேண்டுகிறோம் அன்னையே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

TRT தமிழ் ஒலி (F A C E Association) · 20வது ஆண்டு நினைவுதினம் – அமரர் திருமதி. பொன்னையா செல்லம்மா
பகிரவும்...