Main Menu

15வது ஆண்டு நினைவு தினம் – அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி (21/12/2023)

தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Mitry-Mory ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி அவர்களின் 15ம் ஆண்டு நினைவு தினம் 21ம் திகதி மார்கழி மாதம் வியாழக்கிழமைஅனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி அவர்களை அன்புக்கணவர் செல்லத்துரை அன்புப் பிள்ளைகள் , பிரான்சில் வசிக்கும் கேதீஸ்வரன் குடும்பம், ஜோதீஸ்வரன் புஷ்பா குடும்பம், மகேஸ்வரன் குடும்பம், சிவமதி தர்மபாலா குடும்பம், லண்டனில் வசிக்கும் கலைமதி பாலராஜன் குடும்பம்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புத்தாயாரை நினைவு கூருகின்னறர்.

இன்று 15 வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் செல்லத்துரை இராஜலட்சுமி அம்மாவை TRT தமிழ்ஒலியின் அனைத்து உறவுகளும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகன், அன்பு மருமகள் ஜோதி புஷ்பா குடும்பத்தினர் .

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

அம்மா மூன்று எழுத்து.
அன்பு மூன்று எழுத்து
பாசம் மூன்று எழுத்து
முத்துப் போன்று – உங்கள்
உள்ளம் கொண்டு – நீங்கள்
அணைத்து சென்றவர்கள்
ஆயிரம் ஆயிரம் அம்மா!
அவர்களின் உள்ளத்தில் நீங்கள்
என்றும் நீங்காத சிரஞ்சீவி, தாயே!

பகிரவும்...