Main Menu

யாழில்71 குடும்பங்கள் பாதிப்பு; 8 வீடுகள் சேதம்

யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக” மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”யாழில்  கடந்த 24 மணி நேரத்தில் 38.4 மில்லிமீற்றர் அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்காரணமாக சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்” இவ்வாறு ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...