Main Menu

12ம் ஆண்டு நினைவஞ்சலி – செல்வி.தர்சிகா ஸ்ரீரமணன் (15/05/2021)

தாயகத்தில் குப்பிளான் R.ஸ்ரீரமணன், புதுக்குடியிருப்பு இதயராணி (தீபா) தம்பதிகளின் செல்வப்புதல்வி தர்சிகாவின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று 15ம் திகதி மே மாதம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்றைய நாள் முள்ளி வாய்க்காலில் மரணித்த அனைவருக்காகவும் செல்வி தர்சிகாவின் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள் அன்பு அப்பா ஸ்ரீரமணன் அன்பு அம்மா இதயராணி அன்பு அண்ணா ஜெனுசாந்த், அன்புத்தங்கை யதுர்சிகா, அன்புத் தம்பி ஆதவன் மற்றும் பிரான்சில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா குடும்பத்தினர், ஜேர்மனியில் வசிக்கும் மாமா, அத்தை குடும்பம், தாயகத்தில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா குடும்பம், சித்தப்பாமார், சித்திமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் .

இன்றைய நாளில் நினைவு கூரப்படும் தர்சிகா மற்றும் ஏனைய அனைத்து உறவுகளுக்காகவும் தமிழ் ஒலி குடும்பம் சார்பில் நாமும் பிரார்த்தித்துக் கொள்கிறோம் .

இன்றைய TRTதமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் இன்றைய தினம் நினைவு கூரப்படும் தர்சிகாவின், அன்பு சகோதரர்கள் ஜெனுசாந், யதுர்சிகா , ஆதவன்

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

TRT தமிழ் ஒலி (F A C E Association) · கவிதை

பகிரவும்...