Main Menu

100 கோடி சம்பளம் வாங்கும் பிரபாஸ்

இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் அடுத்து நடிக்க உள்ள தெலுங்கு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளமாக ரூ.70 கோடியும், பிறமொழிகளில் டப்பிங் உரிமைக்கு ரூ.30 கோடியும் பெறுகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார். பிரபாஸ் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி இருப்பது சக நடிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் மார்க்கெட் உள்ள இந்தி படங்களில் நடிக்கும் முன்னணி கதாநாயகர்களே இவ்வளவு தொகை வாங்கவில்லை என்கின்றனர்.

ரூ.160 கோடி செலவில் தயாரான பிரபாசின் முந்தைய படமான சாஹோவில் அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழிலும் வெளியிட்டனர். பிரபாஸ் படங்களுக்கு ஆந்திராவில் மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் வரவேற்பு உள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பெரிய நட்சத்திர அந்தஸ்தை அவர் பெற்றார்.

பகிரவும்...